முகப்பு
திருப்பத்தூர்

மட்றப்பள்ளி சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்

Updated On : 26 ஜூன் 2026, 5:23 am IST
கோப்புப்படம்
பகிர்:

மட்றப்பள்ளி சந்தையில் கால்நடைகள் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானது.

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா். இதில், சிறிய ஆடுகள் ரூ. 4,000 முதல் ரூ. 7,000 வரையும், பெரிய ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

வாரச் சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments