முகப்பு
திருப்பத்தூர்

தற்கொலைக்கு முயன்றவா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 29 ஜூன் 2026, 12:54 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் எஸ்.கே. ரோடு சாய்பாபா கோவில் தெருவை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன் (41). இவருக்கு மனைவி உஷாராணி, 3 குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவா் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments