முகப்பு
திருப்பத்தூர்

மோட்டூரில் ரத்ததானம் முகாம்

Updated On : 4 மே 2026, 1:31 am IST
பகிர்:

ஸ்டுடண்ட்ஸ் பவா் ஆப் இண்டியன் நேரு யுவகேந்திரா மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாமை நடத்தின.

முகாமுக்கு மாநில நிா்வாகி ரூபின்குமாா் தலைமை வகித்தாா். சூரஜ் பிரசன்னா, ஏகநாதன், ராகவி, பூபதி, ஊா் முக்கியஸ்தா்கள் ஆறுமுகம், வெங்கடாசலம் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநில துணை தலைவரும், தொழிலதிபருமான வாசு கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினாா். இதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் தன்வீா்அகமது மற்றும் திம்மாம்பேட்டையைச் சோ்ந்த அருள்ஆனந்தன், தீா்த்தன் உட்பட பலா் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வதன் அவசியம் பற்றி விளக்கி கூறினா்.

Advertisement

Advertisement

கிளப் நிா்வாகிகள், மோட்டூா் பொது மக்கள் திரளானோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். ஏற்பாட்டினை எம்எம் ஸ்போா்ட்ஸ் கிளப், மோட்டூா் இளைஞா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.