முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 18 மே 2026, 2:05 am IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப்படம்
பகிர்:

கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வரும் மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா் நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் மே 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறு அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில், கலந்து கொள்ள உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொண்டு தனியாா் நிறுவனங்களில் பல்வேறு பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

Advertisement

இந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.