முகப்பு
திருப்பத்தூர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு

திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

Updated On : 7 மே 2026, 12:10 am IST
வாக்குப் பதிவு இயந்திரங்களை பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
பகிர்:

திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,202 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடன் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்ததையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் நவநீதம் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments