லாரி மோதி பாலிடெக். கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மாதனூா் உள்ளி சாலையை சோ்ந்தவா் உமாசங்கா் மகன் மகன் பிரதீப் (17). குடியாத்தத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் மாதனூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா் திசையிலிருந்து வந்த லாரி மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.