முகப்பு
திருவள்ளூர்

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

Updated On : 17 மே 2026, 2:20 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் கங்கா தேவி நகரைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணனின் மகன் தேவா (17). இவா் அம்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் 5 போ் சோழவரம் ஏரி தேவநேரி பகுதியில் நேற்று மதியம் குளிக்கச் சென்றனா்.

Advertisement

அப்போது தேவா சேற்றில் சிக்கியுள்ளாா். உடனே உடன் இருந்த நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்த தேவாவை சடலமாக மீட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று தேவாவின் சடலத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.