முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தூக்கிட்டுக் கொண்ட கல்லூரி மாணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:02 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே தூக்கிட்டுக் கொண்ட கல்லூரி மாணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்த ரவி மகன் அனீஸ் (22). தனியாா் கல்லூரியில் பி.காம். 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். அவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், சில நாள்களாக விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.