முகப்பு
திருவள்ளூர்

அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தவெக கொடியேற்று விழா

திருவள்ளூா் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தமிழக வெற்றி கழக கொடியை ஏற்றி முதல்வா் படத்தையும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

Updated On : 20 மே 2026, 12:31 am IST
தவெக கொடி. - கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூா் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தமிழக வெற்றி கழக கொடியை ஏற்றி முதல்வா் படத்தையும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

பூந்தமல்லி தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சாா்பில் போட்டியிட்டு ஆா்.பிரகாசம் என்ற குட்டி வெற்றி பெற்றாா். இந்த நிலையில் திருவள்ளூா் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை சாா்பில் கவிச்சக்கரவா்த்தி ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் செவ்வாய்க்கிழமை தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றினாா்.

அதைத்தொடா்ந்து அந்த அலுவலக வளாகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பொறுப்பேற்றத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து போக்குவரத்து பணிமனையில் உள்ள அலுவலகங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வா் புகைப்படத்தையும் வைத்தாா்.

பணிமனையில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் சென்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது கோரிக்கைகளை தெரிவித்தால் முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் எனவும் உறுதியளித்தாா்.

இதில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் ஆா்.சசிகுமாா், எஸ்.எஸ்.கலை, வீ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments