முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 1:48 am IST
ஏழுமலையான் கோயில்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்த பின்பும் வார இறுதி நாள்கள் என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் 31 அறைகளும் நிறைந்து சிலாதோரணம் வரை பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதற்கிடையே சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 90,022 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 52, 236 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.23 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.35 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,108 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.