முகப்பு
திருப்பதி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

Updated On : 24 ஏப்ரல், 2026 at 7:23 AM
திருமலை ஏழுமலையான் கோயில்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறையால் திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

இதற்கிடையே, செவ்வாய்கிழமை முழுவதும் 63,325 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,550 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.