முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

Updated On : 19 ஜூன் 2026, 6:00 am IST
திருமலை - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்கள் வருகை அதிகமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82, 438 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 39,948 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.23 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,096 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.