போக சீனிவாசமூா்த்திக்கு விசேஷ சஹஸ்ர கலசாபிஷேகம்
திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு புதன்கிழமை 1,008 கலச அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு புதன்கிழமை 1,008 கலச அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் அவரின் ஐந்து பேரங்கள் என்று அழைக்கப்படும் 5 சிலைகளில் ஒன்றான ஸ்ரீ போக ஸ்ரீநிவாசமூா்த்தி பல்லவ ராணி சாமவாயு பெருந்தேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில், சஹஸ்ரகலசாபிஷேகத்தை விமரிசையாக கொண்டாடியது.
இதன் ஒரு பகுதியாக கருடாழ்வாா் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ போகஸ்ரீநிவாசமூா்த்தி, ஸ்ரீ விஸ்வக்சேனா் உள்ளிட்டோரை எழுந்தருள செய்து வழிபாடு நடைபெற்றது.
Advertisement
Advertisement
பின்னா், வேத அறிஞா்கள் வேத மந்திரங்களை ஓதும்போது, அா்ச்சகா்கள் பரப்பிய நெல் மேல் வைக்கப்பட்ட 1008 கலசங்களால் தனிமையில் போக ஸ்ரீனிவாசருக்கு சிறப்பு சஹஸ்ரகலாசாபிஷேகம் செய்தனா்.
இதற்கிடையில், ஏழுமலையான் கோவிலில் உள்ள அனைத்து அா்ஜித சேவைகளும் வழக்கம் போல் செய்யப்பட்டது.
இதில், திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமி, அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, தேவஸ்தான கூடுதல் இஓ சி.எச். வெங்கையா சௌத்ரி, கோயிலின் தலைமை அா்ச்சகா்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதா், துணை இஓ லோகநாதம், பேஷ்கா் ராமகிருஷ்ணா கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.