முகப்பு
திருவண்ணாமலை

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

போளூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:53 am IST
பகிர்:

போளூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் பேருந்து நிலையம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட போலீஸார் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதில், செங்கம் வட்டம், காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் பாஷா மகன் ஷாஜகான் (35) என்பதும், அவர் போளூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஷாஜகானை கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில், எட்டேகால் பவுன் தங்க நகைகளைப் 
பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments