பாஜக ஆலோசனைக் கூட்டம்
செங்கத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜம்புகுமார்
ஜெயின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர், ஒன்றியத் தலைவர் முரளிதரன், நகர பொதுச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தண்டராம்பட்டு ஒன்றியத் தலைவர் வடிவேல், நிர்வாகிகள் விஜயன், தருமன், பழநிவேல், தாமோதரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.