சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
பஞ்சாப் எஸ்சி ஆணையம் முன்பு மத்திய இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மன்னிப்பு கோரியது குறித்து...
சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக மத்திய இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டூ, பஞ்சாப் மாநில பட்டியலினர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய ரயில்வே துறையின் இணையமைச்சரான ரவ்நீத் சிங் பிட்டூ, கடந்த மே 26 அன்று காவல் துறை அதிகாரி உடனான வாக்குவாதத்தில் அவரின் சாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் பதிவான விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தனது பேச்சுக்காக மத்திய இணையமைச்சர் பிட்டூ பொது மன்னிப்பு கோரியிருந்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்குப் பஞ்சாப் மாநில பட்டியலினர் ஆணையம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2 முறை ஆஜராகமல் தவிர்த்து வந்த மத்திய இணையமைச்சர் பிட்டூ இன்று (ஜூன் 24) பஞ்சாப் பட்டியலினர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி தனது தவறை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ஆணையம், ரவ்நீத் சிங் பிட்டூவை பில்லூரில் உள்ள தேரா பாபா பிரம்மதாஸ், குரு ரவிதாஸ் மகராஜுடன் தொடர்புடைய தேரா சச்கந்த் பாலன், ஜலந்தரில், பகவான் வால்மீகி தீரத் ஸ்தல் மற்றும் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிப் ஆகிய நான்கு வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று மரியாதைச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
Union Minister of State Ravneet Singh Bittu has appeared before the Punjab Commission for SC and tendered an apology for making casteist remarks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.