மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 4 பேர் கைது
போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போளூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ராஜா (34), முருகேசன் மகன் ரவி (45), சேட்டு மகன் பெத்தல் (44), ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் முருகன் (27)ஆகியோர் போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து உரிய அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.