முகப்பு
தமிழ்நாடு

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து..

Updated On : 25 ஜூன் 2026, 11:53 am IST
எ.வ.வேலு / லஞ்ச ஒழிப்புத் துறை - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதி.ரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு , திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

2006 முதல் 2011 வரை அமச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக எ.வ. வேலு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழுமையானத் தகவல்கள் தெரியவரும்.

இத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

summary

Ongoing raids by the Directorate of Vigilance and Anti-Corruption Case registered against 11 individuals, including E.V. Velu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments