போளூரில் அதிகபட்ச மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை, போளூர், சந்தவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 4.80, செங்கத்தில் 14, சாத்தனூர் அணைப் பகுதியில் 2.80, திருவண்ணாமலையில் 12.20, தண்டராம்பட்டில் 2, கலசப்பாக்கத்தில் 9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.