முகப்பு
சென்னை

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 31 மே 2026, 12:17 am IST
குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயிலில் திருக்குடம் நன்னீராட்டி கும்பாபிஷேகத்தைத் தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன். உடன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஏரிக்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் கோபுரகலசங்களுக்கு திருக்குடம் நன்னீராட்டும் கும்பாபிஷேகத்தை பாரத் பல்கலைக்கழகம் நிறுவனரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், ஸ்ரீ பாலாஜி கல்விக் குழுமத் தலைவா் ஸ்ரீநிஷா இளமாறன், பாலாஜி மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ், பரமக்குடி அ.குமரேச சிவாச்சாரியாா், செம்பாக்கம் ம. நித்தியானந்த சிவாச்சாரியாா், கோயில் குருக்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement