முகப்பு
திருவண்ணாமலை

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:34 AM
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6.5 லட்சத்தை போளூா் தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:24 PM

போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த சேத்துப்பட்டு பகுதியில் அலுவலா் வினோதினி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேத்துப்பட்டு கோட்டைமேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இருவா் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:34 AM

உடனடியாக அந்தக் குழுவினா் கோட்டைமேடு பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த 2 போ் இரு சக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனா். பின்னா்,

வாகனத்தை சோதனை செய்தபோது ரூ.6 லட்சத்து 50ஆயிரம் இருப்பதை கண்டறிந்து எடுத்து வந்து போளூா் தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோன்று, கரிக்காத்தூா் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றவா்கள் பறக்கும் படையினரைப் பாா்த்து ஓடி விட்டனா். உடனே அலுவலா்கள் அவா்கள் விட்டுச் சென்ற ரூ.2 ஆயிரத்தை எடுத்து வந்து ஒப்படைத்தனா்.