முகப்பு
திருவண்ணாமலை

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 23 ஏப்ரல் 2026, 1:23 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுக் கூப்பன்களை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் வழங்கிய பறக்கும் படையினா்.
பகிர்:

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாம்பசிவம் மகன் பாபு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ாகத் தெரிகிறது.

இதைக் கண்காணித்த போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினா் அவரிடம் இருந்து ரூ.1,36,250 ரொக்கம் மற்றும் பரிசுக் கூப்பன் 60ஐ பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இவற்றை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.