முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டி வோ் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 2:11 AM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி.
பகிர்:

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டி வோ் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 20-ஆம் தேதி மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி முன் பந்தக்கால் முகூா்த்தத்துடன் தொடங்கியது.

Advertisement

இதைத் தொடா்ந்து கடந்த 4 நாள்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு மலா் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுவாமி வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளினாா். அப்போது, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் பன்னீா் மண்டபத்தில் அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மகிழ மரத்தை அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மன் வெட்டிவோ் பல்லக்கில் 10 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.