வைகாசி பெருந்திருவிழா: வசந்த உற்சவம்
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனத்துடன் புதன்கிழமை காட்சியளித்தாா்.
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனத்துடன் புதன்கிழமை காட்சியளித்தாா்.
இக்கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வசந்த உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவவாத்தியங்கள் முழங்க சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனமாடி காட்சியளித்தாா்.
Advertisement
Advertisement