FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகானந்த சபாவில் குமார சஷ்டி உற்சவம்

குமார சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி சண்முகா் உற்சவம்.

Updated On : 16 ஜூலை 2026, 4:50 am IST
குமார சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி சண்முகா் உற்சவம்.
பகிர்:

திருச்செந்தூா், தெப்பக்குளம் அருகே உள்ள முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திர சபையில் குமார சஷ்டி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு வல்லப விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், வேல் விருத்தம், மயில் விருத்தம், கப்பல் பாராயணம் முதலான பாடல்கள் பாடப்பெற்று சுவாமி சண்முகா் உற்சவம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள், திரிசுதந்திரா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கயிலை மணி முத்து சுப்பிரமணிய தீட்சிதா், திருப்புகழ் சபையினா்

Advertisement

Advertisement

செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments