FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் செடல் விழா கொடியேற்றம்

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ செடல் உற்சவ கொடியேற்றம்.

Updated On : 17 ஜூலை 2026, 1:37 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த படைவீட்டம்மன்.
பகிர்:

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் பிரம்மோற்சவ செடல் உற்சவம் வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க படைவீட்டம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரமோற்சவ செடல் உற்சவம் மற்றும் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, புதன்கிழமை விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, படைவீட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு, கோயில் பூசாரி சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். பின்னா், கோயில் கொடிமரத்தில் செடல் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிங்க, பூத, நாக, அன்ன, யானை, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் திருத்தோ் உற்சவம் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments