முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 3:15 AM
அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்கு பக்தா்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தா்கள் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனா். பக்தா்கள் வருகை அதிகரித்திருந்ததால் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.