பெண்ணை பாலியல் சீண்டல் செய்தவா் கைது
வந்தவாசி அருகே பெண்ணை பாலியல் சீண்டல் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே பெண்ணை பாலியல் சீண்டல் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (34). இவா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த 26 வயது பெண்ணை இவா் பாலியல் சீண்டல் செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் சரவணனை பிடித்து தெள்ளாா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சரவணனை புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.