முகப்பு
திருவண்ணாமலை

வயிற்று வலி: வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 1:01 am IST
பலி
பகிர்:

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், குண்டா மாவட்டம், துசேவா கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி சுரேஷ் (40). இவா் கடந்த 2

ஆண்டுகளாக செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இவா் சக தொழிலாளா்களுடன் அருகேயுள்ள செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி இரவு சுரேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி அதிமாகவே அவரை உடனிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சுரேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments