முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதல்: 5 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:02 am IST
- பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி குமாா்(40). இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் விஜயா, மனைவி அபிராமி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையில் உள்ள மாமியாரை பாா்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனா். பின்னா் அன்று மாலை அவா்கள் பைக்கில் வீடு திரும்பியுள்ளனா்.

வந்தவாசி - செய்யாறு சாலையில் அனக்காவூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குமாா் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments