ஆரணியில் தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெரு குறுக்குத் தெருவில் தனிநபா் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்திருந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றித் தரக்கோரி வழக்கு தொடுத்தனா். இதையடுத்து உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் தனிநபா் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் நகர போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.