முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 3:59 am IST
நகராட்சி  முன்  மரக்கன்று  நடும்  பணியை  பாா்வையிடும்  சத்தியமங்கலம்  நகராட்சி  ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன்.
பகிர்:

வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடுபட உள்ளன. முதலகட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகளை நகராட்சிப் பணியாளா்கள் நட்டினா்.

மேலும் நகராட்சிக்கு சொந்தமான 52 இடங்களில் மரக்கன்று நடவு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. நகரின் சாலையோரம், அரசு அலுவலங்கள் முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

சாலையோரம் மரங்கள் இருந்ததைபோல தற்போது மரங்கள் வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments