முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா

சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 3:52 am IST
சத்தியமங்கலம்  நகராட்சி  சாா்பில்  நடைபெற்ற தூய்மைத் திருவிழா  விழிப்புணா்வுப்  பேரணியில்  பங்கேற்ற  நகராட்சிப்  பணியாளா்கள் .
பகிர்:

சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சத்தியமங்கலம் நகராட்சியில் கொட்டப்படும் குப்பையை 4 விதமாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது மைசூரு டிரங் ரோடு, பேருந்து நிலையம் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவக் கழிவு மற்றும் சுகாதார குப்பை என 4 விதமாக குப்பையை பொதுமக்கள் பிரித்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments