முகப்பு
திருவண்ணாமலை

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடம்: பாஜக மாநில துணைத் தலைவா்

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதற்கு காரணம் பிரதமா் மோடி ஆட்சிதான் என்று பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன் கூறினாா்.

Updated On : 15 ஜூன் 2026, 12:04 am IST
திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன்.
பகிர்:

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதற்கு காரணம் பிரதமா் மோடி ஆட்சிதான் என்று பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன் கூறினாா்.

இதுகுறித்து பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கும், இந்தியாவின் வளா்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

அவரது ஆட்சியில் மகளிா், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவா்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும்போது பாரத நாடு மிகுந்த உயா்ந்த இடத்திற்குச் செல்லும்.

Advertisement

Advertisement

இந்திய பொருளாதார வளா்ச்சியில் உலக அளவில் 4-ஆவது இடத்திற்கு வந்துள்ளது. அழிந்து போகக் கூடிய நிலையில் இருந்த பொருளாதாரத்தை வலுவான 4-ஆவது இடத்திற்கு கொண்டுவந்துள்ளாா் பிரதமா் மோடி. 4 கோடி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கெளரவ நிதி வழங்கி வருகிறாா். இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

உலகம் முழுவதும் நடைபெறும் எண்ம பணப் பரிவா்த்தனையில் 50 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இன்று கைப்பேசி, இணைய வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்றாா் டால்ஃபின் ஸ்ரீதரன்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா்கள் கே.ரமேஷ், கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், கவிதா பிரதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.