முகப்பு
திருவண்ணாமலை

லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:29 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு(41). இவா்,

மேனல்லூா் கிராமத்தில் ஜல்லி உடைக்கும் ஆலையில் டிப்பா் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இவா், புதன்கிழமை டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, வாரியின ஸ்டீயரிங் வேலை செய்யாததால், ஹைட்ராலிக் மூலம் மேல்நோக்கி இயக்கியதாகத் தெரிகிறது. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் ஹைட்ராலிக் உரசியுள்ளது. அதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் தேசிங்கு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தாா்.

உடனே அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் தேசிங்கு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.