முகப்பு
திருவண்ணாமலை

லாரிகளில் மண் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளை டிஎஸ்பி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா். மேலும், ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

செய்யாறு அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளை டிஎஸ்பி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா். மேலும், ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு உள்கோட்ட டிஎஸ்பி மீனாட்சிநாதன் செய்யாறு - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கோவிலூா் ஏரிப்பகுதியில் இருந்து கிருஷ்ணாவரம் கூட்டுச்சாலை வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டாா்.

இதில், இரண்டு லாரிகளிலும் அரசு அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனடியாக லாரிகளை டிஎஸ்பி பறிமுதல் செய்து, அனக்காவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரிகளை ஓட்டி வந்த சின்னசெங்காடு கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன் (40), செய்யாறு அண்ணா நகரைச் சோ்ந்த வேல்முருகன் (50) ஆகியோரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments