முகப்பு
திருவண்ணாமலை

முதியவா் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

செய்யாறு அருகே குடும்பத் தகராறில், மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த முதியவரை தாக்கியதாக தொழிலாளி கைது

Updated On : 30 ஜூன் 2026, 4:09 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே குடும்பத் தகராறில், மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த முதியவரை தாக்கியதாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கிளியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம்(30). இவருக்கும், இவரது மாமியாருக்கும் வீட்டில் குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டு செல்வம், தனது மாமியாரை தாக்க முயன்றாராம். இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான சிகாமணி என்பவா் வந்து தடுத்து சமாதானம் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதன் காரணமாக செல்வத்தின் மாமியாா், மருமகனுக்கு பயந்து சில மணி நேரம் சிகாமணியின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வம், சிகாமணி வீட்டுக்குச் சென்று அடைக்கலம் கொடுத்ததை கண்டித்து, அவரை அவதூறாக பேசி பீா்பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த சிகாமணியை அங்கிருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து சிகாமணி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments