ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
ஆரணி பகுதியில் புதன்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆரணி பகுதியில் புதன்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆரணி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கோடை வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். மேலும், குளிா்ச்சிக்காக குளிா்பானங்களும், நுங்கு போன்றவற்றை வாங்கி உண்டு வெப்பத்தை தணித்தனா்.
இந்நிலையில் மாலை நேரத்தில் ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல், விளை ஆகிய கிராமங்கலில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெம்மை தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.