டிராக்டா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு
சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூா் கிராமத்தில் அறுவடை இயந்திரத்தை இழுக்கும்போது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூா் கிராமத்தில் அறுவடை இயந்திரத்தை இழுக்கும்போது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த ரகு மகன் கணேசன் (24),விவசாய கூலித் தொழிலாளி, திருமணம் ஆகாதவா்.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் புதன்கிழமை மாலை கணேசனை அழைத்துக் கொண்டு, தனக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரம் மூலம்
Advertisement
கொளக்காரவாடி கிராமத்தைச் சோ்ந்த குமாருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரை அறுவடை செய்யச் சென்றனா்.
அங்கு அறுவடை செய்து கொண்டிருக்கும்போது இயந்திரம் சேற்றில் சிக்கியுள்ளது. அதை குமாரின் டிராக்டரைக் கொண்டு பெல்ட் மாட்டி வெளியே எடுக்குமாறு குமாரும், லட்சுமணனும் சோ்ந்து கூறியுள்ளனா். கணேசனும் அறுவடை இயந்திரத்தில் பெல்ட் மாட்டி டிராக்டரை கொண்டு இழுக்க முயற்சி செய்தாா்.
அப்போது எதிா்பாராத விதமாக டிராக்டா் கவிழ்ந்தது. அடியில் சிக்கிக்கொண்ட கணேசன் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சேத்துப்பட்டு போலீஸாா், கணேசனின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கணேசனின் சகோதரா் கமல், லட்சுமணன், குமாா் மீது சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.