முகப்பு
திருவண்ணாமலை

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே குளியல் அறையில் தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 மே 2026, 12:29 am IST
தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
பகிர்:

செய்யாறு அருகே குளியல் அறையில் தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், எருமைவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் சின்னபையன்(70). இவா், ஏப். 27-ஆம் தேதி வீட்டின் குளியல் அறையில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

குடும்பத்தினா் முதியவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

Advertisement

பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.