சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு அஞ்சலி
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடம் சிவக்குமார சுவாமிகள் மறைந்ததையடுத்து குடியாத்தத்தில்
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடம் சிவக்குமார சுவாமிகள் மறைந்ததையடுத்து குடியாத்தத்தில் அவரது உருவப் படத்துக்கு வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தத்தை அடுத்த போடிப்பேட்டையில் வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றின் கும்பாபிஷேகம் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவக்குமார சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
இந்நிலையில் அவர் மறைந்ததையடுத்து வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் போடிப்பேட்டை பகுதியில் சிவக்குமார சுவாமிகளின் உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான லிங்காயத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.