இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.
கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தேசிய பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் அவர் தாக்கப்பட்டார் என்றும் அந்த மாநில அமைச்சர் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்
ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஒருவரை சுட்டுப் பிடித்ததுள்ளனர்.
Advertisement
Advertisement
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
திருச்சி கிழக்குத் தொகுதி உள்பட திருச்சி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சி செல்கிறார்.
வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்
திருவள்ளுவரைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க நடைபெற்றதாகக் கூறப்படும் முயற்சிகள் தொடர்பாக வெளிவராத உண்மைகள் பற்றி...