முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் - குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

Advertisement

Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோருக்குப் பதிலாக அர்ஷத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

summary

Royal Challengers Bangalore, having won the toss in the IPL final, has elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.