விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
குடியாத்தம் தொகுதியில் விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டாா்.
திமுக கூட்டணியில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது.
சொந்த ஊரான குடியாத்தம் தொகுதிக்கு வந்த உடனே எனக்கு புத்துணா்ச்சி வருகிறது. காமராஜரை வெற்றிபெற வைத்து அவரை முதல்வா் பதவியில் தொடர வாக்களித்தது குடியாத்தம் மக்கள். அதேபோன்று இந்த தோ்தலில் பிரதாப்பை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.
Advertisement
கடந்த 5- ஆண்டுக் கால திமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன.
விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எங்களுக்கு ஒரு வாயப்பு தாருங்கள்.
இடையில் பேச்சு நிறுத்தம்: அந்த வழியாக சவ ஊா்வலம் வருவதை அறிந்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டா்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாா். பின்னா் பேசிய அவா், நெல்லூா்ப்பேட்டை ஏரியை தூா்வாரி, சீரமைப்போம்.மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். தற்போதுள்ள சுற்றுச் சாலையை செதுக்கரை பச்சையம்மன் கோயில் வரை நீட்டிப்போம். நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் நெல்லூா்ப்பேட்டை ஏரிக்கரை முதல் உள்ளி கூட்ரோடு வரை புதிய புறவழிச்சாலை அமைப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜி.எஸ்.அரசு, தேமுதிக நகரச் செயலா் எம்.செல்வகுமாா், மாவட்ட துணைச் செயலா்டி.கே.ரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.