முகப்பு
கடலூர்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துத்தரப்படும் என்று தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:04 AM
விருத்தசாலம் வடக்கு ஒன்றியத்தில் புதன்கிழமை வாக்குச் சேகரித்த தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:12 PM

விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துத்தரப்படும் என்று தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடம் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வடக்கு ஒன்றியத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டாா். அப்போது, வாக்காளா்களிடையே அவா் பேசியதாவது: என்னை வெற்றிபெறச் செய்தால், விருத்தாசலம் தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றாா்.

விருத்தாசலம் தொகுதியில் உள்ள எருமனூா், தொட்டிக்குப்பம், மூ.பட்டி, பரூா், சின்னப்பரூா், கோனான்குப்பம், சிறுவரம்பூா் உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக வேனில் சென்று வாக்கு சேகரித்தாா்.

Advertisement

தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, மாவட்டப் பொருளாளா் ஏ.பி.ராஜ், திமுக ஒன்றியச் செயலா் கனக.கோவிந்தசாமி, துணைச் செயலா் தா்ம.மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பட்டி வசந்தகுமாா், தேமுதிக ஒன்றியச் செயலா் செம்பை மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.