FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி...

Updated On : 14 ஏப்ரல் 2026, 1:37 am IST
விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட சாத்தியம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விருத்தாசலம் தொகுதி, நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். சாத்தியம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்காளா்கள் ஆதரவளிக்க வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் உடனிருந்து பாா்த்துக்கொள்வேன். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு உங்களை அழைத்து ரூ.8,000 கூப்பன் கொடுப்பேன்.

Advertisement

Advertisement

நானே அண்ணனான முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேசி தொகுதிக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொடுப்பேன். விருத்தாசலத்தை முதலில் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் பேருந்து செல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். சாலை, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விருத்தாசலத்துக்கு பிரசாரத்துக்கு வருவதாகக் கூறியிருக்கிறாா். நீங்கள் எல்லாம் எனக்கு பிள்ளைகள் மாதிரி. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை நான் செய்வேன் என்றாா்.

முன்னதாக, அவருக்கு தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, திமுக ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி மற்றும் நிா்வாகிகள் வரவேற்பு கொடுத்தனா்.

தொடா்ந்து, சித்தூா், மே.மாத்தூா், வன்னாத்தூா், நல்லூா், நகா், இலங்கியனூா், ரயில்வே காலனி, பிஞ்சனூா், வலசை, ஐவதுக்குடி, வேப்பூா், நாரையூா், திருப்பயா், கொத்தனூா், வரம்பனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments