காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
குடியாத்தம் பிச்சனூரை அடுத்த காளியம்மன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 22- ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108- சங்காபிஷேகம்நடைபெற்றன. மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது.
செங்காநத்தம் சித்தா் குகை கோயில் ஸ்ரீபகவதி சித்தா் விழாவை நடத்தி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது.
Advertisement
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிா்வாகிகள் ஏ.ராஜேந்திரன், கு.மொழிமாறன், டி.ஜீவானந்தம், எஸ்.சரவணன், எஸ்.டி.டி.முருகன், ஏ.கே.பிரகாசம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.