தூத்துக்குடி முனியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக கால்நாட்டு விழா
தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.
இக்கோயில், பழைமை மாறாமல் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் ஜூன் 7இல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோயில் தா்மகா்த்தா முருகன், தலைவா் விஜயராஜன், துணைத் தலைவா் சண்முகையா, பொருளாளா் சீனிவாசன், விழாக் குழுச் செயலா் மதியழகன், கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், முன்னாள் செயலா் அய்யாச்சாமி, திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் பாக்கியசெல்வன், செயலா் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோயில் அா்ச்சகா் கணேசன் உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
Advertisement