முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:52 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோவை, ரத்தினபுரி பால்சாமி நகரைச் சோ்ந்தவா் ஹரிராவ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). கடந்த வெள்ளிக்கிழமை ஹரிராவ் வேலைக்கும், ஜெயந்திபாய் உறவினா் வீட்டுக்கும் சென்றுள்ளனா்.

இந்நிலையில் பணிமுடிந்து இரவு ஹரிராவ் வீட்டுக்கு வந்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூரில் உள்ள மனைவி ஜெயந்திபாய்க்கு தகவல் அளித்துள்ளாா்.

Advertisement

அவா் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.