போராட்டம்: திமுகவினர் 15 பேர் கைது
பிரதமர் மோடி உருவப்படத்தை தூக்கில்போட முயன்ற திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி உருவப்படத்தை தூக்கில்போட முயன்ற திமுகவினர் 15 பேர் கைது
செய்யப்பட்டனர்.
காவரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பொள்ளாச்சியில் திமுக நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி, தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரது உருவப்படங்களை தூக்கிலிட முயன்றனர். அவர்களுக்கு எதிராக கண்டன கோஷமும் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமாகாவினர் கையெழுத்து இயக்கம்...: காவரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டி மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் தமாகாவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மாவட்டத் தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் கன்னிமுத்து, பழனிசெவ்வேல், சுப்புராயன், மணிகண்டன், பிரியங்கா ராமசாமி, ஜெகதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.